பஞ்சாபின் அமைதியைக் சீர்குலைக்க சிலர் நினைக்கிறார்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் லூதியானா கீழமை நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கழிவறையில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் விரைவில் பூர குணமடைய விழைகிறேன்” என்றார்.

இது பற்றி அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

சிலர் பஞ்சாபின் அமைதியைக் சீர்குலைக்க நினைக்கிறார்கள். பஞ்சாபின் 3 கோடி மக்கள் அவர்களின் திட்டங்களை வெற்றிபெற அனுமதிக்க மாட்டார்கள். நாம் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடிக்க வேண்டும் இந்தச் செய்தியைக் கேட்டு வருந்துகிறேன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!