ரவுடிகளை அடக்குவதில் ஜெயலலிதா போலவே செய்யப்படுகிறார் ஸ்டாலின் – செல்லூர் ராஜூ

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், மதுரை மாநகராட்சியில் உள்ள முக்கிய சாலைகள், தெருக்கள் மேடு பள்ளமாக உள்ளன. இது விரைவில் சீரமைக்கப்பட வேண்டும். குடிநீருடன் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது பதவிக் காலத்தில் ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அதேபோல, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!