சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சேலம் அருகே உள்ள வாய்க்கால்பட்டாரையில் ”நகருக்குள் வனம்’ ‘ திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

‘நகருக்குள் வனம்’ திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள பாசன வசதி இல்லாத ஏரிகளை தூர்வாரி பாசன பகுதிகளுக்கு மழைநீரை திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Translate »
error: Content is protected !!