புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கி அஞ்சலி செலுத்திய சூர்யா

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரிலும், சமூக வலைத்தளம் மூலமாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

அவரது உடல் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.அதன்பின்பு, நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமாரின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நடிகர் சூர்யா புனித் ராஜ்குமாரின் சமாதியில் கண்கலங்கி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருக்கிறார்.

 

Translate »
error: Content is protected !!