ஆசிரியர் அடித்ததில் பள்ளி மாணவனுக்கு தலையில் வீக்கம் – வழக்கு பதிவு

திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு ஒன்றியற்குட்பட்ட வீர கோவிலில் சென் ஜோசப் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் வேணுகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாந்தி இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். அவர்களின் மகனான கிஷோரை சென் ஜோசப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு கிஷோர் படித்து வந்த நிலையில்,  நேற்று டைரி எழுதாத வந்ததை கண்டித்து ஆசிரியர் கிஷோரைக் கொம்பால் தலையில் அடித்துள்ளார்.  கிஷோர் வீட்டிற்கு வந்த பொழுது தலையை பார்த்து அவருடைய அம்மா சாந்தி கேட்ட பொழுது, ஆசிரியர் அடித்து விட்டார் என்று கிஷோர் கூறினான்.

தொடர்ந்து சாந்தி மற்றும் அவர் உறவினர்கள் ஆசிரியரிடம் கேட்ட பொழுது, என்னை ஒன்னும் பண்ண முடியாது நீ எங்க வேணாலும் போகலாம் என்று ஆசிரியர் கூறியுள்ளனர். அதை தொடர்ந்து பள்ளி மாணவனை திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு குழந்தைகள் பிரிவில் அனுமதித்துள்ளனர்.  இது தொடர்பாக திருவல்லங்காடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!