கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்தும் வாகன ஓட்டிகள்..  நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறையிடம் புகார்..!

கொடைக்கானல் ஏரிச்சாலையில் சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் ரசிக்கும் இடமாக கொடைக்கானல் ஏரி அமைந்துள்ளது.இங்கு வரும் பயணிகள் ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி , குதிரை சவாரி ,மற்றும் நடைபயணம் மேற்கொண்டு மகிழ்வர். இந்நிலையில் கொடைக்கானலை சேர்ந்த சில வாலிபர்கள் இரு சக்கர வாகனத்தில் ஏரிசாலையில் சாகசம் செய்து சமூக வளையதளங்களில்  பதிவிட்டும் வருகின்றனர் ..இவர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடும் பொது சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் இருந்து வருகின்றனர் ..இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ..  

Translate »
error: Content is protected !!