இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் முதல் மரணம்

ராஜஸ்தானில் உள்ள உதைப்பூர் மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அந்த நபர் கொரோனாவுக்கு பிந்தைய நிமோனியா மற்றும் சர்க்கரை…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 29.54 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

இந்தியாவில் அதிவேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 58,097 பேருக்கு தொற்று

இந்தியாவில், நேற்று 33,750 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 50 லட்சத்து 18 ஆயிரத்து 358…

தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு – மும்பை மேயர் தகவல்

மும்பையில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என மேயர் கிஷோரி பெட்னேக்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது:- தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் மும்பையில் ஊரடங்கு உத்தரவு தேவைப்படும். இதை நான் சொல்லவில்லை.…

கொரோனா பரவல்: கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவு தீவிரப்படுத்தப்படுமா? – இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை

கர்நாடகாவில் கொரோனாவுடன் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது, பெங்களூரில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதேபோல், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவது…

இந்தியாவில் அதிவேகத்தில் அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு.. 33,750 பேருக்கு தொற்று

இந்தியாவில், நேற்று 27,553 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 38 ஆயிரத்து 882 ஆக…

இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டுள்ளதா..?

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், கடந்த 2ம் தேதி இந்தியாவில் கண்டறியப்பட்டது. டெல்டாவை விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால், ஒமைக்ரான் நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளதாக…

மும்பையில் இன்று முதல் வரும் 7ம் தேதி வரை 144 தடை உத்தரவு

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மும்பையில் இன்று முதல் வரும் ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் வெளியே வந்து கூடினால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் மாநகர காவல் துறையினர்…

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. வழிபாட்டு தலங்கள் மூடல்

ஒமைக்ரான் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.…

Translate »
error: Content is protected !!