தமிழிசை செளந்தரராஜனுக்கு மனநிலை பாதித்துள்ளது: சிகிச்சை பெற நாராயணசாமி அறிவுரை

பிரதமர் மோடி தினமும் மூன்று உடைமாற்றுகின்றார். அவருக்கு இத்தாலி, ஜெர்மனியில் இருந்து உடைகள் வருகின்றது. இவர்கள் ராகுலைப்பற்றி பேச தகுதி இல்லை. ராகுலின் பாதயாத்திரையை பாஜக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ராகுலின் பாதயாத்திரையை தமிழிசை ஏலனம் செய்துள்ளார். தெலுங்கானாவின் நிரந்தர ஆளுநராக இருப்பவர் தமிழிசை அவரை அங்குள்ள முதல்வர் அமைச்சர் புறக்கணிப்பதால் அவர் புதுச்சேரியிலே உட்கார்ந்துள்ளார்.

ராகுலின் நடைபயணத்தை பற்றி விமர்சனம் செய்து வரும் ஆளுநர் தமிழிசை அரசியல் செய்யக்கூடாது அல்லது அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசவேண்டும், மேலும் அவருக்கு மனநிலை சரியில்லை எனத்தோன்றுகின்றது. அவர் மன நல மருத்துவரை பார்க்க வேண்டும் என்றும் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!