இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். ஒரே நாளில் அதிகப்படியான குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மருத்துவ படுகைகள் வேகமாக நிரம்பி வருவதாக கூறப்படுகிறது.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மொத்தம் 300 படுக்கைகள் காய்ச்சல் வார்டில் உள்ளது. ஃப்ளு காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டுள்ளதால் காய்ச்சல் வார்டுகள் நிரம்பியதாக மருத்துவமனை நிர்வாகத்தால் கூறப்படுகிறது.

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கும் போது, தற்போது அதிகரித்திருக்கும் காய்ச்சல், மழை காலத்தில் வழக்கமாக அதிகரிக்கும் என்றும், கோவிட் காலத்தில் இரண்டு வருடமாக காய்ச்சலின் அளவு குறைவாக இருந்ததாகவும், தற்போது 2019 ஆம் ஆண்டில் உள்ளதை போல பருவ காலத்திற்கு ஏற்படும் காய்ச்சலாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!