மத்திய அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை

 

 

மத்திய அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை என்று, மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பியுமான வைகோ நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 38 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சூறையாடப்படுவதும் தொடர் கதையாகி வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி தோல்வியுற்ற நிலையில், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த ஜனவரி மாதம் தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டு, கடலில் வீசி எரியப்பட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.

கேரள மீனவர்கள் இத்தாலிய கடற்படையால் படுகொலை செய்யப்படும் போது உச்சநீதிமன்றம் தலையிட்டு உயிரிழந்த கேரள மீனவர்களுக்கு 2 கோடி ரூபாய் நிவாரணம் பெற்று தந்த நிலையில், தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

 

Translate »
error: Content is protected !!