பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சிறுமி… கம்பியை பிடித்து உயிர் தப்பினார்

மத்திய பிரதேச மாநிலம், செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக நேற்று மாலை வயல்வெளி பக்கம் சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமி ஆண் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இதையடுத்து, சிறுமி தனக்கு துரோகம் காட்டிக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக அருகில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளார். சிறுமியை கிணற்றில் தள்ளிவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

கிணற்றில் விழுந்து சிறுமி கிணற்றில் இருந்த கம்பியின் உதவியுடன் கிணற்றில் ஏறிய சிறுமி வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் நேற்று குற்றவாளியை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் மீது கற்பழிப்பு மற்றும் குழந்தை வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!