இமாசல பிரதேசத்தில் வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு

இமாசல பிரதேசத்தில், வருகிற 27 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

சிம்லா,

இமாச்சலப் பிரதேச அரசு அடுத்த வாரம் திங்கள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!