இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 200 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.

கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. 

இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 11 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. மராட்டியத்தில் 54 பேர், டெல்லியில் 54 பேர், தெலுங்கானாவில் 20 பேர், ராஜஸ்தானில் 18 பேர், கர்நாடகாவில் 14 பேர், குஜராத் 14 பேர், கேரளாவில் 15 பேர், உத்தரப்பிரதேசம் 2 பேர், ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஒருவர் என்று ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Translate »
error: Content is protected !!