புதிய புல்லட் பைக் தீப்பிடித்து வெடித்தது

 

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் புதிய புல்லட் வாகனம் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், புதிதாக புல்லட் பைக் ஒன்றை வாங்கி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு கொண்டு சென்றுள்ளார்.

பைக்கிற்கு பூஜைகளை செய்துவிட்டு கோவிலுக்குள் செல்லும் போது திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் தீயை அணைக்க முயற்சித்துள்ளார்.

இருப்பினும் தீ பெட்ரோல் டேங்கில் பற்றியதால் பைக் வெடித்து சிதறியது. இதனை கண்டு அங்குள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

 

Translate »
error: Content is protected !!