82-வது வயதில் 25-வது பட்டபடிப்புக்கு விண்ணப்பித்த முதியவர்..!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முதியவர் ஒருவர் தனது 82வது வயதில் 25வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் கதிராமங்கலத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (82). சிறுவயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் இன்று வரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டய படிப்புகளையும், ஓய்வுக்குப் பிறகு 12 பட்டய படிப்புகளையும் முடித்துள்ளார். பி.ஏ., எம்.ஏ உட்பட மொத்தம் 24 பட்டங்கள் பெற்றுள்ளார்.

இந்நிலையில், 82 வயதாகும் இவர் தற்போது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 25வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட பல்கலைக்கழக துணைவேந்தர் குருமூர்த்தி அவர்களை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!