பெங்களூரு மக்கள் குடிநீர் இல்லாமல் தவிப்பு

 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வாழும் மக்களுக்கு  குடிநீர் கிடைத்திட மத்திய அரசு உதவ வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கேட்டுக்கொண்டுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி கோரி, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கிறார்.

இந்தநிலையில் மாநிலங்களவையில் இதுதொடர்பான விவாதத்தின் போது பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரம் போதிய குடிநீர் இல்லாமல் தவிப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் அண்டை மாநில மக்களும் பெங்களூரு வந்து அங்குள்ள குடிநீர் தட்டுப்பாடு நிலையை பார்க்கலாம் என கூறிய அவர்,  அவர்களுக்கு குடிநீர் கிடைக்க  உரிய ஒத்துழைப்பு வழங்கும்படி கைக்கூப்பி கேட்டுக்கொண்டார்.

 

Translate »
error: Content is protected !!