ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை

பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு காவல்துறையினர் செயல்படுவதாகவும், ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என அனைத்திந்திய மாதர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மசூதி தெருவில் உள்ள அச்சங்கத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சுகந்தி, கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் வேலை இழந்து கடன் சுமையில் தவித்ததாக குறிப்பிட்ட அவர், அரசின் இலவசங்கள் பெண்களுக்கு முறையாக சென்றடையவில்லை கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு காவல்துறையினர் செயல்படுவதாகவும் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல் உள்ளது என அவர் தெரிவித்தார். மாதர் சங்கத்திற்கு வரும் அனைத்து பிரச்சனைகளையும் கையில் எடுத்து அதற்கான தீர்வினை மாதர் சங்கம் காண்பதாக அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!