உத்தரகாண்டில் நிலைமை இன்னும் தீவிரமாகவே உள்ளது – ராகுல் காந்தி

உத்தரகாண்டில் இடைவிடாமல் கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவு,

உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உத்தரகாண்டில் நிலைமை இன்னும் தீவிரமாகவே உள்ளது. பாதுகாப்பு விதிகளை பின்பற்றவும்.
நிவாரணப் பணிகளில் சாத்தியமான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!