கொரோனா நோய் தொற்றிலிருந்து தடுப்பூசி ஒன்றே பாதுகாப்பு அளிக்கும்

 

கொரோனா நோய் தொற்றிலிருந்து தடுப்பூசி ஒன்றே பாதுகாப்பு அளிக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில், தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், விழுப்புரத்தில் 2 அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த, 101 கோடி 46 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி நூறு சதவீதமும், இரண்டாவது தவணை தடுப்பூசி 98 சதவீதமும் செலுத்தபட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!