கொடைக்கானலில் இன்று சுற்றுலா தளங்கள் மூடல்

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்த சூழலிலும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்தனர்.

இந்நிலையில், கொடைக்கானல் வனப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணி இன்று நடைபெறவுள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்கள் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கொடைக்கானலில் தற்போது திறக்கப்பட்டுள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடுபட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!