திருச்சி.. ஆபத்தான நிலையில் தொங்கும் மின் கம்பம்.. 2 ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.. பொது மக்கள் வேதனை

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை ராஜகோபால் நகரில் ஆபத்தான நிலையில் தொங்கியபடி காட்சி அளிக்கும் மின் கம்பம். கடந்த இரண்டு ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொது மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை அருகே உள்ளது ராஜகோபால் நகர் – இந்த தெருவில் மின் கம்பம் ஒன்று பல மாதங்களாக பழுதடைந்து தொங்கியபடி உள்ளது,இது குறித்து திருச்சி மாநகராட்சி,மின்வாரியம் உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டாக புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.

தற்போது மழை துவங்கி பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பாக இந்த மின் கம்பத்தை மாற்றி தர வேண்டும் என்று அப்பகுதி உள்ள பொதுமக்கள் வேண்டுகோளை முன்வைத்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!