உ.பி. வன்முறை.. மனித உயிரை விட முக்கியமானது எதுவுமில்லை – குஷ்பு டுவீட்

உத்தர பிரதேசத்தில் நேற்று நிகந்த வன்முறை சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினார். இந்த வன்முறை சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும், கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச வன்முறை குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்ட செய்தி,

உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 8 பேரை கொன்றது கடுமையான குற்றம். இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும். மனித  உயிரை விட முக்கியமானது எதுவுமில்லை. மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம்” என்று அவர் பதிவிட்டார்.

Translate »
error: Content is protected !!