நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் 45 பறக்கும் படை அமைப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க சென்னையில் 45 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில், 37 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யும் போது உடனடியாக வீடியோ எடுத்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. வியாபாரிகளிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டால் உரிய ஆவணத்தை சமர்ப்பித்த பின் திருப்பி அளிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!