உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: ஆக்ரா தொகுதியில் போட்டியிடும் முதல் திருநங்கை

403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கிடையில், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் ஆக்ரா கண்டோன்மென்ட் தொகுதியில் ராதிகா பாய் என்ற திருநங்கை சுயேட்சையாக போட்டியிடுகிறார். ஆக்ரா தொகுதியில் போட்டியிடும் முதல் திருநங்கை இவர்தான். 26 வயதான ராதிகா பாய், சுயேச்சை வேட்பாளராக கடந்த 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கான வேட்புமனு நேற்று அங்கீகரிக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!