அரசியல் வராமலேயே வெற்றி – வந்தால் மாஸ் தான்!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,காஞ்சிபுரம் மாவட்டம் கருப்படித்தட்டை காந்திநகர் 1 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நகர செயலாளர் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 65 வாக்குகள் பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் வடபாதியை சேர்ந்த ரீனா புருஷோத்தமன் என்பவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

Translate »
error: Content is protected !!