சிகிச்சைக்குப்பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் துபாய் புறப்பட்டு சென்றார். சிகிச்சைக்கு முன், விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. இதைக்கண்ட ரசிகர்கள் வேதனை அடைந்தனர். முன்னதாக விஜயகாந்துடன் அவருடைய மனைவி பிரேமலதாவும் துபாய் செல்வதாக இருந்தது. ஆனால் பாஸ்போர்ட் பிரச்சினை காரணமாக அவரால் கணவர் விஜயகாந்துடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். இதையடுத்து, துபாயில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்தின் புகைப்படம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியது. விஜயகாந்தின் ட்விட்டர் பதிவில்…. ”நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என குறிப்பிட்டிருந்தார். தற்போது அவர், சிகிச்சைக்குப்பின் சென்னை திரும்பினார்.

Translate »
error: Content is protected !!