ஆக்கிரமிப்புகளை தவிர்க்க நீர் நிலை நிலங்களை பதிவு செய்யக் கூடாது – பதிவு துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்புகளை தவிர்க்க நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்யக் கூடாது என பதிவு துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு இல்லை என அறிவிப்பு பெற வேண்டும். சொத்துவரி, மின்சாரம், குடிநீர் இணைப்புகளை முன்னறிவிப்பின்றி வழங்கக் கூடாது என்றும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு நிலத்தை அனுமதித்த அதிகாரிகள் மீது ஒழுங்கு மற்றும் குற்றவியல் நடவடிக்கை தேவை என்றும் பதிவுத்துறையினருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

அனுமதி கோரும் கட்டிடத்தை ஆய்வு செய்து நீர்நிலைகளில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்டு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.

Translate »
error: Content is protected !!