வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கப் புலம்பெயர் தமிழர் நல வாரியம் – கனிமொழி நன்றி

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கப் புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த வாரியம் அரசு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பதின்மூன்று பேரைக் கொண்டு உருவாக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கப் புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. தமிழகத்தையும், தங்கள் குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இடர்கள் நீங்க இந்த வாரியம் அரணாக அமையும் என அவர் பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!