அரசியல் தலைவர்கள் லக்கிம்பூர் கேரிக்கு செல்வதை தடுப்பது ஏன்..? – பிரதமருக்கு கெஜ்ரிவால் கேள்வி

உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் வன்முறையில் விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வன்முறை நடைபெற்ற பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்,லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “ஒருபுறம் அரசு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது, மறுபுறம் அரசியல் தலைவர்கள் லக்கிம்பூர் கேரிக்கு செல்வதை தடுக்கிறார்கள். அதன் பின்னணியில் என்ன காரணம்? பிரதமர் அவர்களே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்து மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று நாடு விரும்புகிறது” என்றார்.

Translate »
error: Content is protected !!