ரஷ்யா- உக்ரைன் போரால், உரம் விலை உயருமா?

ரஷ்யா- உக்ரைன் போரால், உரம் தயாரிப்புக்கு தேவையான பொட்டாஷ் விலை உயருமா என தமிழக எம்.பி ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், ரஷ்யா- உக்ரைன் போரால் இந்தியாவின் விவசாய துறையில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும் உரம் தயாரிப்புக்கு தேவையான பொட்டாஷின் விலை உயரும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இதனை எதிர்கொள்ள மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் பகவந்த் கியூபா, விவசாயத்திற்கு தேவையான உரப்பொருளின் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

 

Translate »
error: Content is protected !!