கொடைக்கானல் மலை பகுதிகளில் பூத்துள்ள மஞ்சள் போயின்சியானா மலர்கள்

கொடைக்கானல் மலைப்பகுதியில்ஆகஸ்ட் மாதங்களில் பூக்க கூடிய மஞ்சள் வண்ண போயின் சியானா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. பெடோபோரம் டூபியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த மலர்கள் மலைப்பகுதிகளில் மட்டுமே மலரக் கூடிய வகைகளாகும்.

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய இந்த மலர்கள் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே பூக்கின்றன. மர வகைகளை சேர்ந்த இந்த மலர்கள் கொடைக்கானல் பழனி மலைச்சாலையில் அதிக அளவில் பூத்துள்ளன. இரண்டாம் சீசன் தொடங்கியுள்ள இந்த நிலையில் மலைச்சாலைகளில் பூத்துள்ள மஞ்சள் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். கொடைக்கானல் பழனி மலைச்சாலையில் வெள்ளை பாறை அருகே பூத்துள்ளது.

Translate »
error: Content is protected !!