அதிரடி சோதனை.. தேர்தல் பறக்கும் படையினர் ஒரே நாளில் 10.35 கோடி பறிமுதல்

சென்னை,

சென்னை நகரில் தேர்தல் பறக்கும் படையினருடன் காவல்துறையினர் இணைந்து நேற்று ஒரே நாளில் நடத்திய வாகன  சோதனையில் ரூ. 10.35 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6 அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதனையொட்டி தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் சென்னை நகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் ஒருங்கிணைந்து சென்னை நகரின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வாகன தணிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் விதிமுறைகள் மீறி செயல்படுவோர் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சென்னை நகரில் தேர்தல் பறக்கும் படையினர் சென்னை நகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் ஒருங்கிணைந்து வாகன சோதனை நடத்தினர்.

இதில் சென்னையில் 22 இடங்களில் உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட மொத்தம் பணம் ரூ.10 கோடியே 35 லட்சத்து 83 ஆயிரத்து 948 ரொக்கம் மற்றும் லேப்டாப், செல்போன்கள் அடங்கிய எலக்ட்ரானிக் பொருட்கள், 90 அரிசி மூட்டைகள் மற்றும் ரூ.50 ஆயிரம்மதிப்புள்ள விளையாட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப் பின்னர் கைப்பற்றப்பட்ட பணம், பொருட்கள், வாகனங்கள் மற்றும் வாகனத்தில் வந்த நபர்களுடன் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இதில் அதிகபட்சமாக, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய எல்லையில் நடைபெற்ற சோதனையில் ஒரு  வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட பணம் ரூ. 3 கோடியே 59 லட்சம் ரொக்கம் சிக்கியது. மேலும்  திருவல்லிக்கேணியில் ஒரு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.53 கோடிஓட்டேரியில்  ரூ. 1.31 கோடி பணம்மயிலாப்பூரில் ரூ. 1 கோடியே 14 லட்சத்து 93 ஆயிரத்து 900-, ஜாம்பஜார் பகுதியில்  வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 18 லேப்டாப்கள், 8 கேமராக்கள், 67 ஐபோன்கள், 20 ஆப்பிள் கைக்கடிகாரங்கள்  உட்பட எலக்ட்ரானிக் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

x`ஏப்ரல் 6 சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை நகர காவல் அனைத்து சரக காவல் அதிகாரிகளும், தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை திறம்பட செயல்படுத்திட உரிய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Translate »
error: Content is protected !!