இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,151 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 06 ஆயிரம் 065 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 42,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 02 லட்சத்து 69 ஆயிரத்து 796 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 4,22,660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 518 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 13 ஆயிரம் 609 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 40 கோடி 49 லட்சத்து 31 ஆயிரம் 715 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!