இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,32,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 85 லட்சத்து 74 ஆயிரத்தை கடந்தது.

தற்போது 2,07,071 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 65 லட்சத்து 97 ஆயிரத்தை தாண்டியது.

தற்போது 16.35 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,40,702 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன் மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 93.08 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.19 சயவீதமாகவும்  உள்ளது. மேலும், தற்போது 5.73 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20,75,428 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 35 கோடியே 74 லட்சத்து 33 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!