இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,591 பேருக்குக்  கொரோனா தொற்று உறுதியாகியு ள்ளது. ஒரே நாளில் 3,57,295 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேர கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,60,31,991பேர்

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,59,591பேர்

இதுவரை குணமடைந்தோர்: 2,27,12,735பேர்

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,57,295 பேர்

கொரோனா உயிரிழப்பு: 2,91,331பேர்.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 4,209 பேர்

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 30,27,925 பேர்

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 19,18,79,503 பேர்

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 32,44,17,870 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 20,61,683 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!