இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58, 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2 கோடி 98 லட்சம் 81 ஆயிரம் 965 ஆக உயர்ந்துள்ளது..

கொரோனா நோய்த்தொற்றால் ஒரே நாளில் மேலும் 1,576 பேர் இறந்தனர். இது மொத்த இறப்பு எண்ணிக்கை 3,86,713 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 87,619 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடி 87 லட்சம் 66 ஆயிரம் 009 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் 7,29,243 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!