இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 24 மணிநேரத்தில் 53, 256 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 35 ஆயிரத்து 221 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஒரேநாளில் மேலும் 1,422 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,88,185 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 78, 190 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சாட்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 199 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 7,02,887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!