இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,951 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,951 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த நோய் தோற்று பாதிப்புகளின் எண்ணிக்கையை 3,03,62,848 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், தொற்றுநோய்களால் ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,98,454 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 60,729 பேர் கொரோனா நோய் தொற்றிலுருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 2,94,27,330 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தற்போது 5,37,064 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து குணமடைவோர் வீதம் 96.92 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது.

 

 

 

Translate »
error: Content is protected !!