இந்திய தேசிய லீக்கின் அவசரமாநில செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிகேனியில் உள்ள மாநில தலைமையகத்தில் 9- 3 – 2021 அன்று மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
அகில இந்திய துணைத் தலைவர் டாக்டர் ஷகில் அகமது, மாநில செயல் தலைவர் நாகூர் ராஜா, மாநில பொதுச் செயலாளர் ஜகிருதீன் அகமது மாநில துணைத் தலைவர் பஷீர் அகமது தலைமை நிலையச் செயலாளர் சையத்ஷாதான் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். கட்சியின் நிலைப்பாடு, தேர்தல், அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இறுதியாக 2021 தமிழக 16வது சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என விவாதிக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சி என்பது பா.ஜ.க வின் பினாமி ஆட்சியாகவே இருந்தது – மாநில உரிமைகள் பறிக் கொடுக்கப்பட்டு – மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காததால் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையின் தலையில் 40 ஆயிரம் ரூபாய் கடன் சுமையுள்ளது.
போலியான வாக்கு குறுதிகளை மத்திய பா.ஜ.க அரசும் மாநில அ.தி.முக அரசு ம்அறிவித்து மக்களை ஏமாற்றி வருதுகிறது. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது என்று தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
மக்களின் மனநிலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது சரியானது அல்ல என்ற அடிப்படையில் மதசார்பற்ற, சமூக நீதி, கொள்ளையை தொடர்ந்து பின்பற்றி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை இந்திய தேசிய லீக் ஆதரிப்பது என்றும் இக் கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் களப்பணியாற்றுவது. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர,கிளை நிர்வாகிகள் தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வெற்றியை பெறவைப்பது என இந்திய தேசிய லீக்கின் மாநில செயற்குழு தீர்மானித்து உள்ளது