எச்சரிக்கை.. கொரோனா இரண்டாவது அலை தொடங்கி விட்டது – சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர்

கர்நாடகத்தில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கி விட்டது: சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர்

கர்நாடகத்தில் கொரோனா இரண்டாவது அலை தொடக்கத்தில் இருப்பதால் பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக பின்பற்றி, பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் உள்ள வல்லுநர்கள் கரோனா தொற்றின் தீவிரம் மேலும் பரவாமல் இருக்கும் பொருட்டு, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள்.

அவற்றைக் குறித்து திங்களன்று முதல்வர் எடியூரப்பாவுடன் ஆலோசித்து, நிலமையைக் கட்டுக்குள் வைப்பது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினைப்  பராமரித்தல், கைகளைக்  கழுவுதல் மற்றும் அவசியம் இல்லாமல் வெளியே செல்வத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட நடைமுறைகளைக் கடைபிடிக்காமல் இருப்பதன் மூலமாக உண்டாகும் அபாயம் குறித்து பொதுமக்களையும் மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் எச்சரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!