ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை!

தமிழகத்தில், ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வீட்டு வசதித்துறை முதன்மை செயலராக இருந்த ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளராக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக ஷன்சொங்கம் ஜடாக் சிரு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!