ஒடிஸாவில் காங்கிரஸ் வேட்பாளர் மங்காராஜ் கோரோனோ பாதிப்பால் உயிரிழப்பு

புவனேசுவரம்,

ஒடிஸா மாநிலம் பிபிலி பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற மூன்று நாள்களே உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மங்காராஜ் (53) கோரோனோ பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து, தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் மங்காராஜ் கடந்த வாரம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கோரோனோ பாதிப்பு உள்ளது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மங்காராஜ் புதன்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ்.கே.லோகனி தெரிவித்துள்ளார். மங்காராஜுக்கு பதிலாக புதிய வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கலாம்.. ஆனால், மற்ற கட்சிகள் வேட்பாளரை மாற்ற அனுமதி இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!