கொச்சி – மங்களூரு இடையிலான எரிவாயு குழாய் திட்டம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்

கொச்சிமங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் 

கொச்சியில் இருந்து மங்களூருக்கு 450 கி.மீ. இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்

இதன் மூலம், கொச்சியில் உள்ள, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை மீண்டும் வாயுவாக்கும் முனையத்தில் இருந்து மங்களூருவுக்கு கியாஸ் அனுப்பப்படும். குழாய் வழியாக தினமும் 1.2 கோடி மெட்ரிக் கனமீட்டர் கியாசை அனுப்ப முடியும்.

கெயில் இந்தியா நிறுவனம் இந்த கியாஸ் குழாய் இணைப்பை உருவாக்கியிருக்கிறது. கேரளாவில் எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களை இந்த குழாய் அமைப்பு கடந்து செல்கிறது.

இதன் மூலம், வீடுகளுக்கு சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, செலவு குறைந்த குழாய்வழி இயற்கை எரிவாயுவும், போக்குவரத்துத் துறைக்கு அழுத்தப்பட்ட இயற்கை வாயுவும் வினியோகிக்கப்படும். குழாய் இணைப்பு செல்லும் பகுதியில் உள்ள மாவட்டங்களின் வர்த்தக, தொழில் பிரிவுகளுக்கு இயற்கை வாயு வினியோகம் செய்யப்படும்.

மொத்தம் ரூ. 3 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டப்பணி முடிக்கப்பட்டுள்ளது. ‘ஒரு நாடு, ஒரு கியாஸ் வினியோக அமைப்புநோக்கத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். இந்நிகழ்ச்சியில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதல்மந்திரிகள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!