கொரோனா காலத்திலும் கொள்ளை அடித்த அரசு அதிமுக அரசு – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கொரோனா காலத்திலும் கொள்ளை அடித்த அரசு அதிமுக அரசுபொள்ளாச்சி குற்றவாளி மத்திய, மாநில அமைச்சர்களுடன் கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துள்ளார்திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், துறையூர் தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மண்ணச்சநல்லூர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களிடம் பேசிய போது..

பொள்ளாச்சி குற்றவாளி மத்திய, மாநில அமைச்சர்களுடன் கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பா.. வெற்றி பெற்றது. மோடி அலை வீசியதுஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மக்கள் பா..கவிற்கு பட்டை, நாமம் போட்டனர்அந்த கோபத்தில் தமிழ்நாட்டிற்கான புயல் நிவாரணம் உள்ளிட்ட நிதிகளை ஒதுக்காமல் புறக்கணிக்கிறார்கள்.

கொரோனாவிலும் கொள்ளையடிக்கும் ஆட்சி நடைபெற்று வருகிறது. ரேசன் கடைகளில் தரும் பொங்கல் பணம் 2, 500 பெற்றுக்கொள்ளுங்கள். மீதம் 2, 500 கேட்டு பெறுங்கள். ஏனெனில்  5, 000 வழங்க வேண்டும் என்று திமுகதான் முதலில் கோரிக்கை விடுத்தது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டுள்ளார். பகிரங்கமாக சொல்கிறேன். முடிந்தால் வழக்குப் போடுங்க. அதிமுக மாணவரணிச் செயலாளர் உள்ளிட்டோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அதிமுக நிர்வாகி அருளானந்தம், தமிழ்நாட்டு அமைச்சர்கள் மட்டுமின்றி, பா..கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோடும் கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துள்ளார். ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆகப் போகிறது.

அவர் எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. அதிமுகவினர் ஜெயலலிதாவை மறந்து விட்டனர். ஜெயலலிதா அப்பல்லோவில் சாப்பிட்ட ஒரு இட்லி ஒரு கோடி. ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக முதலில் சொன்னவர், அப்போது முதலமைச்சராக இருந்த .பன்னீர்செல்வம்விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டு, 8 முறை சம்மன் அனுப்பியும் .பி.எஸ் ஆஜராகவில்லையே ஏன் என பேசினார்.

Translate »
error: Content is protected !!