கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மோடி!

பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்தி கொண்டார்.

இந்தியாவில் கோவாக்ஸின் கோவிஷீல்டு என்ற இரு கொரோனான் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.

உலகில் பிற நாடுகளில் அந்தந்த நாட்டு தலைவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் புகைப்படம் வெளியாகிறது. இதன்மூலம் மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட தடுப்பூசியை இன்று காலை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார்.

தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்ற வேண்டும். கொரோனா இல்லாத உலகை உருவாக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி மகத்தானதுஎன்று மோடி கூறினார்.

பிரதமர் மோடிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா கொரோனா தடுப்பூசி செலுத்தினார். கோவாக்ஸின் தடுப்பூசி அவருக்கு செலுத்தப்பட்டது. மக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக காலையிலேயே மோடி தடுப்பூசி போட எய்ம்ஸ் மருத்துவமனை சென்றுவிட்டதாக கூறுகின்றனர்.

Translate »
error: Content is protected !!