ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கி, பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடி கொடுத்தனர். என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் பாதுகாப்புப் படையினர் வேறு பயங்கரவாதிகள் இருக்கிறார்களா என தேடுகின்றனர்.

Translate »
error: Content is protected !!