டிச. 4ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்… அடுத்தடுத்த தலைவலியால் மோடி ஏற்பாடு

விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல நெருக்கடிகளுக்கு ஆளாகி வரும் நிலையில், வரும் டிசம்பர் 4ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியை நோக்கி வட மாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் மத்திய அரசு தடுமாறி வருகிறது.

அதுமட்டுமின்றி, கொரோனா நோய்த்தொற்று பரவலால் பொருளாதாரம் படுபாதாளத்திற்கு சென்றுள்ளது; வேலைவாய்ப்பு இல்லாமை உள்ளிட்ட பிரச்சனைகள் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளன.

இச்சூழலில், டிசம்பர் 4ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் காலை 10:30 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!