டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சி போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது.

விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதிக்கும் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் முப்பத்தி எட்டு நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதுவரையிலும்  போராட்டத்தில் பங்கேற்ற 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மற்றும் மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் தலைமையில் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!