தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையக் குழு 2வது நாளாக இன்று ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவினர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் தலைமையில் தேர்தல் ஆணையக் குழு சென்னை வந்துள்ளது.

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை இந்தக் குழுவினர் நேற்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்அப்போது, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் உயர்மட்டக் குழுவினர் காணொலி மூலம் பல மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து வருமான வரி மற்றும் அமலாக்க அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து தலைமை செயலாளர், காவல்துறை இயக்குநர் உள்ளிட்ட தமிழக அரசின் உயர்அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இதனை தொடர்ந்து அக்குழுவினர் புதுச்சேரி செல்கின்றனர்.

 

Translate »
error: Content is protected !!