திமுகவினர் வ உ சிதம்பரம் பிள்ளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவிக்க நேற்று மாநகர காவல்துறை கொரோனா தடுப்பு ஊரடங்கு நடைமுறை சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் கூட்டம் கூடாமல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு செல்லுமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தியாகி வ உ சிதம்பரம் பிள்ளை நினைவு நாளான இன்று திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உள்ள வாவு சிதம்பரம் பிள்ளை திரு உருவ சிலைக்கு திமுக சார்பில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் உள்ளிட்ட திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!